widget

தமிழ்வின் செய்திகள்

lunedì 7 aprile 2014

உழைத்து களைத்தாய் அப்பா..

உறவில் தந்தையாய்
உணர்வில் அன்னையாய்
உயிரில் கலந்தாய் அப்பா _ நான்
இரவில் தனியாக
தெருவில் வரும் போது
மழையில் நனைந்தாய் அப்பா..
குடையில் இடமிருந்தும்

மழையில் நனைந்தாய் அப்பா - தினம்
மனதில் எனை நிறுத்தி
உடலில் தளர்ந்தாலும்
உழைத்து களைத்தாய் அப்பா..
தஞ்சை பெருங்கோயில்
தலைய சிற்பி போல்
என்னை வளர்த்தாய் அப்பா _ தினம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை செதுக்க நீ
உன்னை வருத்தாய் அப்பா..
பணியில் இருந்து நீ

lunedì 31 marzo 2014

துயர் பகிர்வோம் ..

 
திரு சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி                                                                              யாழ். நாகர்கோவில் தரவையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி உபயகதிர்காமத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலாமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குமார்(லண்டன்), கஜன்(அவுஸ்திரேலியா), கவி(லண்டன்), சிஜன், ரூபன், வேந்தன் ஆகியோரின் அனபுத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 01:00 மணிக்கு செம்பியன்பற்றில் அமைந்துள்ள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உழவன் நான் ..

ஒப்பில்லா உழவன் நான் ..
ஒப்பனை இல்லாத மனிதனும் நான்தான் ..
ஒப்புக்கு ஒரு வாழ்க்கையோடு வாழ்கிறேன் !

உலகின் முதல் குடிமகன் நான் ....
உழைத்து பிழைக்கும் உன்னதனும் நான்தான் ..
உயிர் வளர்க்கிறேன் ஊனமான இந்த உலகில் ..!

domenica 30 marzo 2014

மறை சொன்ன சத்திய வழியிலே.......


உதட்டிலே உரைத்திடும் உண்மைகள்,
இதயத்தில் வெறுமையின் பொய்மைகள்.
களவுக்கும் கொடுமைக்கும் பஞ்சமோ..!
படைப்பவன் பெயராலும் இது தொடருதே......

giovedì 27 marzo 2014

பொண்ணு பார்த்திட்டேன்.............


 பால்வண்ணக்காரி
பாவாடை தாவணிக்காரி
பார்வையாலே கொல்லும்
பாசக் கயறுகாரி
நூலன்ன இடைகாரி
நூதன பேச்சுக்காரி
நாடி நரம்புக்குள்
ஊடுருவும் நளினக்காரி ...
சூரிய பொட்டுக்காரி
சுந்தர முககாரி
சுடரொளி பார்வைகாரி
சொர்ணத்துக்கு
சொந்தக்காரி
நாட்டுக்காரி
நல்ல கூட்டுக்காரி -நான்
கட்டிக்கபோகும் பட்டுக்காரி
பால்வண்ண முகம் பார்த்தா
பசி தானே பறந்து போகும்
பாங்குடனே பேசக்கேட்டா
பலநாள் சோகமும் பட்டே போகும்.,....

martedì 25 marzo 2014

இயற்கையின் சங்கமத்தில்......



பூவினமும் அகம் மகிழ்ந்து
பூத்துக் குலுங்குதே...!
புள்ளினமும் வான் வெளியில்
பறந்து மகிழுதே...!...

தேன் சொரிந்து கனிகளெல்லாம்
களிப்பில் ஆடுதே...!
இதைப் பார்க்கும்போது உந்தன் உருவம்
எனக்குள் இனிக்குதே...

பனித்துளிகள் புல்வெளியில்
படுத்து உறங்குதே...!
பகலவனும் மெல்ல வந்து
அதனை எழுப்புதே...!
அசைந்து ஓடும் நதியும் மெல்ல
தாளம் போடுதே...!
அதைக் கண்டு கண்டு என் மனது
உன்னை நாடுதே...!

உலகிலுள்ள இயற்கையெல்லாம்
இன்பந் தருகுதே...!
இனிய தமிழின் காதலினை
உள்ளம் பாடுதே...!

domenica 9 marzo 2014

அழிக்கமுடியாத உறவு தாய்மாமன் உறவு..

 
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் உடனே சொல்வார்கள்
தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில்
விடுமுறை விட்டால் எந்த
ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும்
பசங்களிடம் ஒரு காலத்தில்
(தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க
போனேன் என்று தான் சொல்வார்கள்.
புதிதாக விளையாட்டுப்பொர ுள்
வைத்திருந்தாள்
 யாருடா வாங்கிக்கொடுத்த

giovedì 6 marzo 2014

சுருங்கி வரும் தமிழர் தேசம்!

Sat,Feb 1, 2014. By Parissooriyan
இந்துக்களின் நாகரீகம் எனும் அடிப்படையில், இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழர்களின் மூத்த குடி நாகரீகம் பற்றியது என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை.
 
 
இன்று இந்து நதி கரை வெளி நாகரீகம் ஏறக்குறைய கி.மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள் . இன்று அப்கானிஸ்தான் பாகிஸ்தான் அமைந்துள்ள நிலபகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது.

venerdì 28 febbraio 2014

நண்பா..!

நண்பா..!
ஏன் எனைக்
கொன்றிடத் துணிந்தாய்..?
நான் இறந்தாலிங்கு
நீ இறப்பாயே
தலையசைத்தே
உனக்குத்
தண்ணீர் தந்தேன்.
தகிக்கும் பொழுதினில்
நிழலைத் தந்தேன்
சுவாசிக்க‌
உயிர்க் காற்றினைத்
தந்தேன்
சூழலைக்
குளுமையாய்
மாற்றியும் தந்தேன்

lunedì 24 febbraio 2014

அம்மா

ஒரு தாய்க்குத் தான் தெரியும்
ஒரு தாய் தன் குழந்தை
மேல் வைத்திருக்கும் அன்பும்
அரவணைப்பும்.....
அத்தாயின் அன்பையும்
அரவணைப்பையும்
மதிக்காத ஒரு பெண்
தாயாக இருப்பதற்கு
எவ்வித அருகதையும் இல்லை...
மிருகங்கள் கூட
சில சந்தர்பங்களில்
அவ்வுணர்வுகளை
அன்பாக வெளிக்காட்டுகின்றன....http://muthtamizh.blogspot.it/p/blog-page_3.html

mercoledì 12 febbraio 2014

காதலை சுவாசித்துக் கொண்டிருக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் காதலர்தின நல்வாழ்த்துக்கள்

domenica 9 febbraio 2014

தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. யுத்தம் முடிவுற்ற போதிலும் அது ஏற்படுத்திய துயரம் ஓயவில்லை. பல உயிர்கள் காணாமல் போய்விட்டன.  அநேக உயிர்கள் மரணித்து விட்டன. உடமைகள் அழிந்து விட்டன.   உண்ணவும் உடுக்கவும் நாதியற்று பல குடும்பங்கள் நடைப் பிணமாக வாழ்கின்றன . இவைகளுக்கெல்லாம் முற்று  முழுதான முடிவு காணப்பட வேண்டும் என்பதே  பொது அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என யுத்தத்தினால்  இறந்த காணாமல் போன  உறவினர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர்  தெரிவித்தார். 

venerdì 7 febbraio 2014

பழங்கால வரலாறும், வரைபடங்களும்

                                                              புராண காலம் 
வேதங்கள், உபநிடதங்களுக்கு அடுத்து வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவை புராணங்கள். வேதங்கள், உபநிடதங்களின் பெருமைகள் மற்றும் கருத்துக்கள் புராண காலத்தில் பின்பற்றப்பட்டன. புராணங்களை வேதவியாசர் எழுதினார் எனப்படுகிறது. இவருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. தவிர கருப்பு நிறத்துடன் தீயில் தோன்றியவர் என்று அந்த சொல்லுக்குப் பொருள். வேதவியாசர் என்பது தனி ஒருவர் பெயரா? அல்லது ஒரு குழுவின் பெயரா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,



திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

1.தினப் பொருத்தம்
ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.
2.கணப் பொருத்தம்

MB

Tamil Radios
Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk
 
ஜோதிடம்
 

Wikipedia search

Risultati di ricerca

இத்தாலியின் காலநிலை

 

 

.

.