widget

தமிழ்வின் செய்திகள்

martedì 25 marzo 2014

இயற்கையின் சங்கமத்தில்......



பூவினமும் அகம் மகிழ்ந்து
பூத்துக் குலுங்குதே...!
புள்ளினமும் வான் வெளியில்
பறந்து மகிழுதே...!...

தேன் சொரிந்து கனிகளெல்லாம்
களிப்பில் ஆடுதே...!
இதைப் பார்க்கும்போது உந்தன் உருவம்
எனக்குள் இனிக்குதே...

பனித்துளிகள் புல்வெளியில்
படுத்து உறங்குதே...!
பகலவனும் மெல்ல வந்து
அதனை எழுப்புதே...!
அசைந்து ஓடும் நதியும் மெல்ல
தாளம் போடுதே...!
அதைக் கண்டு கண்டு என் மனது
உன்னை நாடுதே...!

உலகிலுள்ள இயற்கையெல்லாம்
இன்பந் தருகுதே...!
இனிய தமிழின் காதலினை
உள்ளம் பாடுதே...!
என்ன விந்தை எங்கும் என்று
கண்கள் வியக்குதே...!
மனம் வியப்பினிலே என்னை மறந்து
உன்னைத் தேடுதே...

தென்றல்கூட துள்ளிக்குதித்து
இங்கு வீசுதே...!
தேனருந்த வண்டினமும்
பவனி வருகுதே..!
உன்வரவை எண்ணி இங்கு
நானும் வாழ்கிறேன்...!
எனதுயிரே உனக்கு என்றே
உயிரைச் சுமக்கிறேன்...

Nessun commento:

Posta un commento

MB

Tamil Radios
Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk
 
ஜோதிடம்
 

Wikipedia search

Risultati di ricerca

இத்தாலியின் காலநிலை

 

 

.

.