|
தமிழ்வின் செய்திகள்
lunedì 31 marzo 2014
துயர் பகிர்வோம் ..
உழவன் நான் ..
domenica 30 marzo 2014
மறை சொன்ன சத்திய வழியிலே.......
உதட்டிலே உரைத்திடும் உண்மைகள்,
இதயத்தில் வெறுமையின் பொய்மைகள்.
களவுக்கும் கொடுமைக்கும் பஞ்சமோ..!
படைப்பவன் பெயராலும் இது தொடருதே......
giovedì 27 marzo 2014
பொண்ணு பார்த்திட்டேன்.............
பால்வண்ணக்காரி
பாவாடை தாவணிக்காரி
பார்வையாலே கொல்லும்
பாசக் கயறுகாரி
நூலன்ன இடைகாரி
நூதன பேச்சுக்காரி
நாடி நரம்புக்குள்
ஊடுருவும் நளினக்காரி ...
சூரிய பொட்டுக்காரி
சுந்தர முககாரி
சுடரொளி பார்வைகாரி
சொர்ணத்துக்கு
சொந்தக்காரி
நாட்டுக்காரி
நல்ல கூட்டுக்காரி -நான்
கட்டிக்கபோகும் பட்டுக்காரி
பால்வண்ண முகம் பார்த்தா
பசி தானே பறந்து போகும்
பாங்குடனே பேசக்கேட்டா
பலநாள் சோகமும் பட்டே போகும்.,....
martedì 25 marzo 2014
இயற்கையின் சங்கமத்தில்......
பூவினமும் அகம் மகிழ்ந்து
பூத்துக் குலுங்குதே...!
புள்ளினமும் வான் வெளியில்
பறந்து மகிழுதே...!...
தேன் சொரிந்து கனிகளெல்லாம்
களிப்பில் ஆடுதே...!
இதைப் பார்க்கும்போது உந்தன் உருவம்
எனக்குள் இனிக்குதே...
பனித்துளிகள் புல்வெளியில்
படுத்து உறங்குதே...!
பகலவனும் மெல்ல வந்து
அதனை எழுப்புதே...!
அசைந்து ஓடும் நதியும் மெல்ல
தாளம் போடுதே...!
அதைக் கண்டு கண்டு என் மனது
உன்னை நாடுதே...!
உலகிலுள்ள இயற்கையெல்லாம்
இன்பந் தருகுதே...!
இனிய தமிழின் காதலினை
உள்ளம் பாடுதே...!
lunedì 17 marzo 2014
domenica 9 marzo 2014
அழிக்கமுடியாத உறவு தாய்மாமன் உறவு..
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் உடனே சொல்வார்கள்
தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில்
விடுமுறை விட்டால் எந்த
ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும்
பசங்களிடம் ஒரு காலத்தில்
(தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க
போனேன் என்று தான் சொல்வார்கள்.
புதிதாக விளையாட்டுப்பொர ுள்
வைத்திருந்தாள்
யாருடா வாங்கிக்கொடுத்த
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் உடனே சொல்வார்கள்
தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில்
விடுமுறை விட்டால் எந்த
ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும்
பசங்களிடம் ஒரு காலத்தில்
(தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க
போனேன் என்று தான் சொல்வார்கள்.
புதிதாக விளையாட்டுப்பொர ுள்
வைத்திருந்தாள்
யாருடா வாங்கிக்கொடுத்த
giovedì 6 marzo 2014
சுருங்கி வரும் தமிழர் தேசம்!
Sat,Feb 1, 2014. By Parissooriyan
இன்று இந்து நதி கரை வெளி நாகரீகம் ஏறக்குறைய கி.மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள் . இன்று அப்கானிஸ்தான் பாகிஸ்தான் அமைந்துள்ள நிலபகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது. |
Iscriviti a:
Post (Atom)
Wikipedia search
Risultati di ricerca
இத்தாலியின் காலநிலை